சொத்து தகராறில் சித்தப்பாவை அடித்துகொன்ற இளைஞர் – போலீஸ் விசாரணை

 

சொத்து தகராறில் சித்தப்பாவை அடித்துகொன்ற இளைஞர் – போலீஸ் விசாரணை

ஈரோடு

ஈரோடு அருகே சொத்து தகராறில் ஏற்பட்ட மோதலில், சித்தப்பாவை கொலை செய்த இளைஞரை போலீசார் கைதுசெய்தனர். ஈரோடு மாவட்டம் விஜயமங்களம் பாளைய காட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இந்நிலையில், பூர்வீக சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக மூர்த்திக்கும், அவரது அண்ணன் மாரப்பனின் மகன் தினேஷ் என்பவருக்கும் இடையே

சொத்து தகராறில் சித்தப்பாவை அடித்துகொன்ற இளைஞர் – போலீஸ் விசாரணை

அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனது அப்பா இறந்தவிட்டதால், சித்தப்பா மூர்த்தி சொத்தை பிரிப்பதில் தங்களை ஏமாற்றி விட்டதாக கூறி வந்த தினேஷ், நேற்று இரவு மூர்த்தியின் தோட்டத்திற்கு சென்று பிரச்சனை செய்துள்ளார். அப்போது, ஏற்பட்ட மோதலில் மூர்த்தியை அங்கிருந்த

சொத்து தகராறில் சித்தப்பாவை அடித்துகொன்ற இளைஞர் – போலீஸ் விசாரணை

மாட்டுவண்டியின் மீது தினேஷ் தள்ளியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் படுகாயம் அடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த மோதலில் தினேஷ்-க்கும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை போலீசார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து தடையங்களை கைப்பற்றிய பெருந்துறை போலீசார் கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.