ஈரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது

 

ஈரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது

ஈரோடு

ஈரோடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைதுசெய்தனர்.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கருங்கல்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ் நகரில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்குரிய விதமாக சாலையில் நின்று கொண்டிருந்தார்.

ஈரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது

இதனை அடுத்து, அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனால் அவரை சோதனை செய்தபோது உடைக்குள் கஞ்சா பொட்டலத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து சுமார் 150 கிராம் அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா விற்பனை தொடர்பாக அவர் மீது வழக்குபதிவு செய்து கைதுசெய்தனர்.