ஈரோடு-முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி – தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
Oct 7, 2020, 16:15 IST1602067543000
ஈரோடு
அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோட்டில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவிக்கப்பட்டார்.
இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஈரோட்டில், பன்னீர்செல்வம் பார்க் அருகே திரண்ட அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
முன்னாள் துணை மேயர் பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியர்நகர் மனோகரன்,கேசவமூர்த்தி சூரம்பட்டி ஜெகதீஷ், ஜெயராஜ் கோவிந்தராஜ் ராமசாமி தங்கமுத்து, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.