பவானி ஆற்றில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

 

பவானி ஆற்றில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் குளித்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள பவானிசாகர் வெள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் தனுசுராஜ். இவரது வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருப்பூரை சேர்ந்த நண்பர்கள் பாலமணிகண்டன், புவனேஷ் உள்ளிட்ட 5 பேர் வந்துள்ளனர். இந்த நிலையில் நண்பர்கள் அனைவரும் இன்று மதியம் கல்லுகொத்து பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு சென்று குளித்து கொண்டிருந்தனர்.

பவானி ஆற்றில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அப்போது, பாலமணிகண்டன், புவனேஷ் மற்றும் ஶ்ரீதர் ஆகியோர் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் மூவரும் நீரில் மூழ்கிய நிலையில், அருகில் இருந்த மீனவர்கள் உடனடியாக சென்று ஶ்ரீதரை மீட்டு கரை சேர்த்தனர். ஆனால், மற்ற இருவரையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சுமார் 2 மணி மணிநேர தேடுதலுக்கு பின் இருவரையும் சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.