ஈரோடு: குப்பை கழிவுகளில் தீவிபத்து – குடியிருப்புகளை சூழ்ந்த புகை

 

ஈரோடு: குப்பை கழிவுகளில் தீவிபத்து – குடியிருப்புகளை சூழ்ந்த புகை

ஈரோடு நசியனூர் சாலையில் உள்ள குப்பைமேட்டில் இன்று ஏற்பட்ட திடீர் தீவிபத்து காரணமாக அப்பகுதியை புகைமூட்டம் சூழ்ந்தது. ஈரோடு நசியனூர் ரோடு விவேகானந்தர் சாலை குடியிருப்பு பகுதி அருகேயுள்ள காலி இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை
அந்த குப்பை கழிவுகளில் இருந்து திடீரென புகை கிளம்பிய நிலையில், சிறிது நேரத்தில் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி, கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.

ஈரோடு: குப்பை கழிவுகளில் தீவிபத்து – குடியிருப்புகளை சூழ்ந்த புகை

இதனால்அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்ததால், குடியிருப்பு வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஈரோடு: குப்பை கழிவுகளில் தீவிபத்து – குடியிருப்புகளை சூழ்ந்த புகை