தனியார் பள்ளியில் ரூ.5 லட்சம் மோசடி – பெண் ஊழியர் கைது

 

தனியார் பள்ளியில் ரூ.5 லட்சம் மோசடி – பெண் ஊழியர் கைது

கொடைக்கானல் அருகே தனியார் பள்ளியில் 5 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் ஊழியரை போலீசார் கைதுசெய்தனர்.

தனியார் பள்ளியில் ரூ.5 லட்சம் மோசடி – பெண் ஊழியர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான கே.சி.பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் நர்சரி பள்ளியில், குப்பம்மாள்பட்டியை சேர்ந்த ரஞ்சித் என்பவரது மனைவி கீதா(29) கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது போலி ரசீதுகள் மூலம் 5 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பள்ளிநிர்வாகம், மோசடி குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மாவட்ட பெருளாதார குற்றப்பிரிவு காவலி ஆய்வாளர் சத்யா, ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் கீதா பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைடுத்து கீதாவை கைதுசெய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தனியார் பள்ளியில் ரூ.5 லட்சம் மோசடி – பெண் ஊழியர் கைது