பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை- லாரி ஓட்டுநர் போக்சோவில் கைது!

 

பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை- லாரி ஓட்டுநர் போக்சோவில் கைது!

தருமபுரி

பாலக்கோடு அருகே 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த, லாரி ஓட்டுநரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிசந்தை பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது 13 வயது மகன், அங்குள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சிறுவன் தனது வீட்டு மாடியில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் கணேஷ் என்பவர், சிறுவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.

பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை- லாரி ஓட்டுநர் போக்சோவில் கைது!

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் கூச்சலிடவே, அவரது பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தனர். அவர்களை கண்டதும், கணேஷ் அங்கிருந்து தப்பியோடினார். தனக்கு நடந்த கொடுமையை சிறுவன் கூற கேட்ட அவரது பெற்றோர், இதுகுறித்து மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கணேஷ், சிறுவனுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதனை அடுத்து, கணேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்த போலீசார், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.