பாதுகாப்பு வழங்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் இளம்ஜோடி மனு

 

பாதுகாப்பு வழங்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் இளம்ஜோடி மனு

தர்மபுரி

தர்மபுரி அருகே காதல் திருமணம் செய்த இளம்ஜோடி, பாதுகாப்பு கோரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர். தர்மபுரி மாவட்டம் பையர் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முத்து மோனிகா(20). இவர் தனது பெற்றோருடன் ஈரோட்டில் தங்கி, கல்லூரியில் பி.காம். படித்து வந்துள்ளார்.

பாதுகாப்பு வழங்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் இளம்ஜோடி மனு

இந்நிலையில் அவர் தங்கியிருந்த பகுதியில், வசித்து வந்த தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரை சேர்ந்த சிவா(23) என்பருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த முத்துமோனிகாவின் பெற்றோர், சிவா மாற்று சமூகத்தினர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, வீட்டைவிட்டு

பாதுகாப்பு வழங்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் இளம்ஜோடி மனு

வெளியேறிய முத்துமோனிகா கம்பைநல்லூர் அருகிலுள்ள பெருமாள் கோயிலில் நேற்று சிவாவை திருமணம் செய்துகொண்டார். இதையறிந்து முத்து மோனிகாவின் பெற்றோர் தரப்பினர் சிவாவுக்கும், முத்துமோனிகாவுக்கும் தொலைபேசி மூலம் கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தர்மபுரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில், சிவா – முத்துமோனிகா தம்பதியினர் நேற்று மனு அளித்தனர்.