தர்மபுரி- பேத்தி இறந்த சோகத்தில் பாட்டி விஷம் குடித்து தற்கொலை
Oct 11, 2020, 11:22 IST1602395535000
தர்மபுரி
பென்னாகரம் அருகே பேத்தி இறந்த சோகம் தாங்காமல் பாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கெட்டூரை சேர்ந்த காசி என்பவரது மனைவி ரத்தினமாள்(55). இவர்களது மகளுக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் அந்த குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரத்தினம்மாள், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மயங்கிக் கிடந்த ரத்தினம்மாளை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.