எவ்வித கவலையுமின்றி இருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி – உப்புநீர் பிரச்சனையில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கண்டனம்

 

எவ்வித  கவலையுமின்றி இருக்கிறார் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி –  உப்புநீர் பிரச்சனையில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கண்டனம்

உப்பு நீர் பிரச்சினை குறித்தும், அதனால் பொதுமக்கள் படும் சிரமம் குறித்தும் எவ்வித கவலையுமின்றி , எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதே மாநகரத்தில் வசித்து வருகிறார் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘’கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு, உப்புநீர் வழங்கும் ஆழ்குழாய்கிணறு பராமரிப்பு பணிகள் செய்வதற்கு, கோவை மாநகராட்சியால் ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் அ.தி.மு.க.கட்சியினருக்கே வழங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பகுதிகளில் , ஒரு வார்டில்20, ஒரு வார்டில் 30, மற்றொரு வார்டில் 40, என்ற எண்ணிக்கையில் ஆழ்குழாய் கிணறுகள் உள்ளது.

சராசரியாக ஒருவார்டுக்கு, ஏறக்குறைய25 ஆழ்குழாய் கிணறுகள் உள்ளது. இதில் ஒரு ஆழ்குழாய் கிணறு பராமரிப்புக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2324.00 வீதம் கோவை மாநகராட்சியால், ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு ஒப்பந்த தாரருக்கு வழங்கப்படுகிறது. இதை கணக்கிட்டால் ஒரு வார்டுக்கு, ஒரு ஆண்டுக்கு சராசரியாக சுமார் ஏழு இலட்சம் ரூபாய் மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்படுகிறது. இதன்படி, கோவை மாநகராட்சி பகுதிகளில் கணக்கிட்டால், ஒருஆண்டுக்கு சுமார் பலகோடி ரூபாய் கோவை மாநகராட்சியால், ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

எவ்வித  கவலையுமின்றி இருக்கிறார் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி –  உப்புநீர் பிரச்சனையில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கண்டனம்

இதனால் பொதுமக்களுக்கு உப்பு நீர் விநியோகம் சரியான முறையில் கிடைக்காமல் , அன்றாடப் பயன்பாட்டிற்கு கூட உப்பு நீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பொது மக்களுடைய அன்றாடப் பயன்பாட்டிற்கான உப்பு நீர் விநியோகத்தில், கோவை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கவனக்குறைவாக அலட்சியப் போக்கையே கடைப்பிடித்துவருகிறது. இந்த உப்பு நீர்பிரச்சினை தொடர்பாக பலமுறை மாநகராட்சிஆணையாளர், உதவிஆணையாளர், உதவிபொறியாளர் ஆகியோரை தொடர்புகொண்டு பேசியும், கடிதங்கள் கொடுத்தும், பலஇடங்களில் உப்பு நீர்விநியோகம் இதுவரைசீர் செய்யப்படவில்லை.

எவ்வித  கவலையுமின்றி இருக்கிறார் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி –  உப்புநீர் பிரச்சனையில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கண்டனம்

இந்த உப்பு நீர் பிரச்சினை குறித்தும், அதனால் பொதுமக்கள் படும் சிரமம் குறித்தும் எவ்வித கவலையுமின்றி , எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதே மாநகரத்தில் வசித்து வருகிறார்.

பொது மக்களுக்கு அன்றாட பயன்பாட்டிற்குகூட, பல இடங்களில் உப்பு நீர் கொடுக்க முடியாத அவல நிலையில் தமிழக உள்ளாட்சித்துறை உள்ளது. ஆகவே, பொதுமக்களின் நலன் கருதி கோவை மாநகராட்சி பகு திகளில் உப்பு நீர் விநியோகம் சீரான முறையில், காலந்தாழ்த்தாமல் வழங்கவும், சரியான முறையில் தங்களது பராமரிப்புப்பணிகளை செய்யாத ஆழ்குழாய் கிணறு பராமரிக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.