ஒப்பந்த பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து, துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

 
erode

ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கும் முடிவை கைவிட வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட துப்புறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணி, குடிநீர் பணிகள், தெருவிளக்கு பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர். இதில் 400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தினக் கூலிகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகள், குடிநீர் வழங்குதல், தெரு விளக்குகள் பராமரித்தில் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தனியாருக்கு ஓப்பந்த  அடிப்படையில் வழங்க மாநகராட்சி நிர்வாகம்  முடிவு செய்து உள்ளது. 

erode corporation

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியாருக்கு வழங்கப்படும் தூய்மை பணிகளை கைவிட வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தினக்கூலிகளாக உள்ள 400-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், கொரோனோ கால சிறப்பு ஊதியம் மட்டுமின்றி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்களை எழுப்பினர்.