சென்னை விமான நிலையத்தில் ரூ.11.83 லட்சம் தங்கம் பறிமுதல்!
Apr 6, 2021, 12:49 IST1617693575000
சென்னை
துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணிகள் கடத்திவந்த ரூ.11 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான 253 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து நேற்று சென்னை விமானம் நிலையத்துக்கு வந்த சிறப்பு விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் அவர்களின் உடமைகளை சுங்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கு உரிய விதமாக இருந்த 2 பயணிகளை தனியே அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர்கள் இருவரும் பசை வடிவிலான தங்கத்தை, உருளைகளாக ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரிடமும் இருந்து 3 உருளைகளில் 253 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் மதிப்பு சுமார் 11 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து, தங்கத்தை கடத்தி வந்த 2 பயணிகளை கைதுசெய்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.