குடும்ப தகராறில் பொக்லைன் இயந்திர ஓட்டுநர் அடித்துக்கொலை - இருவர் கைது

 
Murder

திருவண்ணாமலை அருகே குடும்ப தகராறில் பொக்லைன் இயந்திர ஓட்டுநரை உருட்டுகட்டையால் அடித்துக்கொன்ற உறவினர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை தாலுகா மங்கலம் அருகே உள்ள அம்மங்கல் ஓடை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (37). இவர் பொக்லைன் இயந்திர ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி பச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில், ஏழுமலைக்கும், ஆனந்தல் கிராமம் முல்லை நகரை சேர்ந்த அவரது மாமியார் செல்வி-க்கும் (60) இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

tiruvannamalai

இந்த நிலையில்,  நேற்று அதிகாலை ஏழுமலை மதுபோதையில் மாமியார் செல்வியின் வீட்டிற்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவர் செல்வியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதனை கண்ட, அதே கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் மற்றொரு ஏழுமலை (26), முத்துராமன் (43) ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.அப்போது, அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கட்டையால் தாக்கியதில், ஓட்டுநர் ஏழுமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தகவல் அறிந்த மங்கலம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் முத்துராமன், எழுமலை ஆகியோரை கைது செய்தனர். குடும்ப தகராறில் பொக்லைன் இயந்திர ஓட்டுநர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.