மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்ததால் ஆத்திரம்... தந்தையை அடித்துக் கொன்ற மகன்

 
murder

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தையை, மகன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த விருதாசம்பட்டி ஊராட்சி கருப்பு கவுண்டன் காட்டுளவு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(55). விவசாயி. இவரது மகன் வீரமணி (27). இவரது மனைவி மாலதி(26). இந்த நிலையில், வீட்டில் தனியாக இருக்கும்போது மாலதிக்கு, மாமனார் ராஜேந்திரன் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

salem

இதனால் ஆத்திரமடைந்த வீரமணி, இதுகுறித்து தந்தை ராஜேந்திரனிடம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் தந்தை - மகன் இடையே கடந்த சில வாரங்களாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் மாலதியின் வீட்டிற்கு சென்று அவரை அவதூறாக பேசியுள்ளார். அதனை வீரமணி தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், அவரை தாக்க கொடுவாளை எடுத்துக் கொண்டு விரட்டியுள்ளார். 

அப்போது, விரமணி கற்கள் மற்றும் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த  நங்கவள்ளி போலீசார், ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, கொலையாளி வீரமணியை கைது செய்தனர்.