6 மாத குழந்தையுடன் இளம்பெண் கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை... ராதாபுரம் அருகே சோகம்!

 
dead

நெல்லை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண், கைக்குழந்தையுடன் கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கும்பிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வளர்மதி(27). இவர்களுக்கு 6 மாத குழந்தை உள்பட 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், வளர்மதிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் வளர்மதி, கைக்குழந்தையுடன் மாயமாகினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன் மற்றும் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

nellai gh

இந்த நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள பயன்பாடற்ற கல்குவாரி குட்டையில் வளர்மதி மற்றும அவரது 6 மாத பெண் குழந்தை சடலமாக மிதந்தனர். இதனை கண்ட அந்த பகுதி மக்கள், ராதாபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வளர்மதியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.