கடவூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

 
rape

கரூர் மாவட்டம் கடவூர் அருகே 8ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த கொசூர் ஊராட்சி ஓட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் தினேஷ்குமார்(25).  இவர் ஓட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளான 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

kulithalai

இதனால் அதிர்ச்சிக்குள்ளான சிறுமியின் பெற்றோர், அவரிடம் இது குறித்து விசாரித்தனர். அப்போது, அவரதுது கர்ப்பத்துக்கு தினேஷ்குமார் தான் காரணம் என தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் தாய், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் தினேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.