திண்டுக்கல்லில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

 
dgl

திண்டுக்கல்லில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மாலையகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரகுநாதபாண்டி (28). இவர் கடந்த 2021ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்  திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் ரகுநாதபாண்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

judgement

இந்த வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று நிறை வடைந்ததை அடுத்து, தீர்ப்பளித்த திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி ரகுநாதபாண்டிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.