குடவாசலில் பாம்பு கடித்து இளைஞர் பலி!

 
thiruvarur

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் பாம்பு கடித்ததில் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 

திருவாரூர் மாவட்டம் குடவாசல்  பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். கூலி தொழிலாளி. இவருக்கு பெண் ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டு, அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், கடந்த வாரம் வீட்டில் இருந்தபோது மோகன்ராஜை நல்ல பாம்பு கடித்துள்ளது. இதனை அடுத்து உறவினர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

dead body

இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குடவாசல் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இளைஞர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.