மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இளைஞர் தற்கொலை... ராஜபாளையத்தில் சோகம்!

 
suicide

ராஜபாளையத்தில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மில் கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் பாபு (34). இவர் தனியார் கல்லுரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மனைவி பிரிந்து சென்றதால் பாஸ்கர் பாபு மனவேதனையுடன் காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரது வீடு பூட்டிக் கிடந்துள்ளது. மேலும், வீட்டில் இருந்து துற்நாற்றம் வீசியுள்ளது. 

rajapalayam

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து பாஸ்கர் பாபுவின்  சகோதரி லட்சுமி பிரபாவுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, பாஸ்கர்பாபு தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கினார். இதனை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தகவலின் பேரில், ராஜபாளையம் தெற்கு போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.