ஈரோட்டில் காளை மாட்டை திருடிய இளைஞர் கைது!

 
arrest

ஈரோட்டில் இரவில் வீட்டின் முன் கட்டியிருந்த காளை மாட்டை திருடிச்சென்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக காளை மாட்டுடன் சென்ற இளைஞரை, சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த இளைஞர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த காட்டச்சநல்லூரை சேர்ந்த கோகுல் (23) என்பதும், அவர் ஈரோட்டில் இரவு நேரத்தில் வீட்டின் முன்பு கட்டியிருந்த காளை மாட்டை திருடிக்கொண்டு தப்பி வந்ததும் தெரிய வந்தது.

police

திருடப்பட்ட மாட்டின் மதிப்பு ரூ. 60 ஆயிரம் இருக்கும். இதனை தொடர்ந்து, டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து காளை மாட்டையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கோகுல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.