தஞ்சாவூரில் திருமணமான 3 மாதத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

தஞ்சாவூரில் திருமணமான 3 மாதத்தில்  சுமை தூக்கும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் கங்கா நகரை சேர்ந்தவர் கலையரசன் (34). இவர் லாரி சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கலையரசனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை மனைவி கண்டித்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று வழக்கம்போல் கலையரசன் வீட்டிற்கு போதையில் வந்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

thanjavur

இதனால் மனமுடைந்த கலையரசன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.