பாரில் தகராறு செய்த தொழிலாளி அடித்துக்கொலை... கோவை அருகே பயங்கரம்!

 
murder

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பாரில் மதுஅருந்திய போது ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்துள்ள தாலத்துறை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (35). கூலித் தொழிலாளி. இவர் கடந்த வியாழக்கிழமை மதியம், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம், ஜெயராஜ் உள்ளிட்டோருடன் நெல்லிக்குப்பம் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள பாரில் அமர்ந்து அனைவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது, ரமேஷ்குமார், பாரில் சப்ளையராக பணிபுரியும் சங்கரன்கோவிலை சேர்ந்த மணிகண்டன் என்பவரை அவதுறாக பேசியதாக கூறப்படுகிறது.

dead body

இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், ரமேஷ்குமாரை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். இதனை அடுத்து, அவரது நண்பர்கள் ரமேஷ்குமாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து, அவர் தனது வீட்டிற்கு சென்று படுத்து துங்கியுள்ளார். இரவு உணவு சாப்பிடுவதற்காக குடும்பத்தினர் அவரை எழுப்பியபோது ரமேஷ்குமார் முச்சு பேச்சின்றி கிடந்துள்ளார். இதனால் உறவினர்கள் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரமேஷ்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் சிறுமுகை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பார் சப்ளையர் மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர்.