பண்ருட்டியில் பெண் விஷம் குடித்து தற்கொலை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சி.என். பாளையம் அருகே உள்ள புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மனைவி ஜெயலட்சுமி(41). இவர் பண்ருட்டி பகுதியில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில், ஜெயலட்சுமிக்கு தலையில் கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் அவ்வப்போது வலி ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக கடலுர் அரசு மருத்துவமனைக்கு சென்ற ஜெயலட்சுமி பின்னர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று பண்ருட்டி டைவர்ஷன் சாலையில் தனியார் திருமணம் மண்டம் அருகேயுள்ள குளத்திற்கு சென்ற ஜெயலட்சுமி, அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குளத்தில் பெண் சடலம் கிடப்பதை கண்ட பொதுமக்கள், இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.