புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் மூழ்கி சிறுவன் உள்பட இருவர் பலி!

 
suicide

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு வேறு சம்பவங்களில் கிணற்றில் மூழ்கி 3 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள நம்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (26). இவர் நேற்று கிராமத்தில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றிருந்தார். கிணற்றில் இறங்கி குளித்தபோது எதிர்பாராத விதமாக சகதியில் சிக்கி கொண்டார். இதில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கிணற்றுக்கு சென்று பார்த்தபோது அங்கு அவரது உடைகள் மட்டும் கிடந்துள்ளன.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், இதுகுறித்து விராலிமலை தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது கோபாலகிருஷ்ணன் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, விராலிமலை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ponnamaravathi

இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள படுதினிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகப்பன். இவரது 3 வயது மகன் ராகுல். நேற்று சிறுவன் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து உறவினர்கள் சென்று பார்த்த்போது சிறுவன் மாயமாகி உள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் தவறி சிறுவன் விழுந்திருக்கலாம் என கருதி, பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றி இறங்கி தேடினர். அப்போது, குழந்தை ராகுல் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டடார். இதனை அடுத்து, பொன்னமராவதி  போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.