தியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள சேடன்குட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். தற்போது முருகன் உடல்நல குறைவு காரணமாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார். அப்போது, அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.

tindivanam

தகவலின் பேரில் திண்டிவனம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீலசார் வழக்குப்பதிவு செய்து, முருகன் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர். உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.