ஈரோட்டில் ஜவுளிக்கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

ஈரோட்டில் ஜவுளிக்கடை உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு சூரம்பட்டி கிராமடை பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (47). இவர் ஈரோடு கண்ணகி வீதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி ஸ்ரீதேவி(45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், தாமோதரனுக்கு தலையில் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், அவர் கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இதனால் அவரது மனைவி ஸ்ரீதேவி, ஜவுளிக்கடையை கவனித்து வந்தார். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மதிய சாப்பாட்டிற்காக ஸ்ரீ தேவி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, படுக்கை அறையில் தாமோதரன் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.

erode gh

இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீதேவி, அக்ககம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிசிக்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், வரும் வழியிலேயே தாமோதரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவலின் பேரில், சூரம்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.