திண்டுக்கல் மாவட்டத்தில் மே 1-ல் டாஸ்மாக் கடைகள் மூடல்!

 
dindigul

திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வரும் மே 1ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3 ஏஏ,  மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் மற்றும் மதுபான விற்பனை தலங்கள் அனைத்தும் வரும் மே 1ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும் என ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.

Tasmac

மேலும், அன்றைய நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும், அன்றைய தினங்களில் விதிகளுக்கு மாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டநபர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியர் விசாகன் எச்சரித்துள்ளார்.