திருச்சி தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

திருச்சியில் தனியார் கல்லூரி விடுதியில் திண்டுக்கல்லை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ். கார் ஓட்டுநர். இவரது மகன் தனசாம் ரிஷி(18). இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை தனசாம் ரிஷியின் அறை நீண்ட நேரமாக திறக்காமல் இருந்துள்ளது. இதனால் அவரது நண்பர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது தனசாம் ரிஷி, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கினார். 

trichy gh

இதனை கண்டு அதிர்ச்சிக்குள்ளான மாணவர்கள், இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.