வாலாஜாபத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்... ஆட்சியர் ஆர்த்தி துவங்கி வைத்தார்!

 
kachipuram

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி துவங்கி வைத்தார். 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் சமுக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நேற்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ்  பிறந்த குழந்தை முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி துவங்கி வைத்தார். இந்த முகாமில் கடுமையான எடை குறைவு, மெலிவு தன்மை, குள்ள தன்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

kanchi

மேலும், ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்), பிரியா ராஜ், மாவட்ட திட்ட அலுவலர் (ஒகுவதி), கிருஷ்ணவேணி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து  கொண்டனர்.