இரணியல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை - தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது!

 
pocso

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகேயுள்ள வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் ( 31). கூலி தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு, இளம்பெண் ஒருவர், தனது 10 வயது மகளும் வந்திருந்தார். சம்பவத்தன்று காலை வீட்டில் உள்ளவர்கள் வெளியே புறப்பட்டு சென்ற நிலையில், சிறுமி வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஜெகதீசன், அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

arrest

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, அழுதவாறு சென்று  தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், வீட்டின் அருகே நின்ற ஜெகதீசனை பிடித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அங்கு ஜெகதீசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.