கோவைக்கு விமானத்தில் கடத்திவந்த ரூ.2 கோடி தங்கம் பறிமுதல் - 2 பயணிகள் கைது!

 
gold

சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான 3.54 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், இது தொடர்பாக 2 பயணிகளை கைது செய்தனர்.

சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில பயணம் செய்தவர்கள் மற்றும் அவர்களது உடமைகளை சுங்கத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கு உரிய விதமாக இருந்த 2 ஆண் பயணிகளை தனியே அழைத்துச்சென்று அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் தாங்கள் அணிந்திருந்த பேண்ட் பாக்கெட்டில் தங்க செயின் மற்றும் கட்டியாக 3.54 கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

covai airport

இதன் மதிப்பு ரூ.2.05 கோடி ஆகும். இதனை அடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்து, அவர்களிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கடலூரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் திருச்சியை சேர்ந்த இப்ராகிம் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, அவர்கள் இருவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், தங்க கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.