"குமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்; மறுஅறிவிப்பு வரும் மீனவர்கள் கடலுக்க செல்ல வேண்டாம்" - ஆட்சியர் அரவிந்த்!

 
kumari

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறையின் அறிவிக்கையின்படி 01.08.2022 முதல் 04.08.2022 வரை அதி கனமழை பெய்ய உள்ளதாக (Red Alert) முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்கவும், மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

rain

வேலும், வெள்ள சேதவிபரங்கள் மற்றும் வெள்ளம் தேங்கிய விபரங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் கட்டணமின்றி செயல்படும் தொலைபேசி எண் 1077 மற்றும் 04652 - 231077-க்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.