புதுக்கோட்டை மாவட்டத்தில் டிச.4-ல் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு - ஆட்சியர் கவித ராமு தகவல்!

 
collector kavidha

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு வரும் 4ஆம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளதாக, ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 70 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்கள் கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வரும் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று எழுத்துத் தேர்வு கீழ்கண்ட மையங்களில் நடத்தப்பட உள்ளது.

கறம்பக்குடி தாலுகாவில் மருதன்கோன்விடுதி அரசு கலைக்கல்லுரி, திருமயம் தாலுகாவில் பிலிவலம் விஎஸ்கே கல்வியியல் கல்லுரி, கந்தர்வக்கோட்டை தாலுகாவில் பழைய கந்தர்வகோட்டை வித்ய விகாஸ் மேல்நிலைப்பள்ளி,  புதுக்கோட்டை தாலுகாவில் புதிய பேருந்து நிலையம் அருகே ராணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி தாலுகாவில் வல்லத்திராக்கோட்டை தெட்சிணாபுரம் எம்என்எஸ்கே பொறியியல் கல்லுரி, இலுப்பூர் தாலுகாவில் இலுப்பூர் மேட்டுச்சாலை மதர் தெரசா வேளாண்மை கல்லுரி, பொன்னமராவதி தாலுகாவில் புதுப்பட்டி அமலா அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பொன்புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குளத்துர் தாலுகாவில் களமாவூர் சீனிவாசநகர் மூகாம்பிகை பொறியியல் கல்லுரி,  விராலிமலை தாலுகாவில் விராலிமலை செக்போஸ்போட் நிறுத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆவுடையார்கோவில் தாலுகாவில் ஆவுடையார்கோவில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி தாலுகாவில் குரும்க்காடு லாரல் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, மணமேல்குடி தாலுகாவில் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.

pudukottai

இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ள  விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலம் அனுமதி சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கிராம உதவியாளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியான https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.phd?id=4-174 என்ற இணையதளத்தினுள் சென்று பதிவு எண்ணினையும், கைபேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் பதிவஞ்சலில் தேர்வு அனுமதிசீட்டு அனுப்பி வைக்கப்படும். மேலும், கூராய்வு செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து விண்ணப்பதாரர்களால் தேர்வு நாளன்று கீழ்காணும் விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.  விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். காலை 9.50-க்கு பின் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 10.50-க்கு முன்னர் தேர்வு அறையை விட்டு வெளியேறி அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனுமதி சீட்டு இன்றி எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதார்கள் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த் வேண்டும். அனுமதிச்சீட்டு மற்றம் கருப்பு பால்பாயின்ட் பேனாவை தவிர தேர்வறைக்குள் வேறு எந்த பொருளையும் கொண்டுவரக்கூடாது. விண்ணப்பதாரர்கள் அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டுவரக்கூடாது, என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.