அரியலூரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

 
collector ariyalur

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2ஆம் மற்றும் 4ஆம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை வெள்ளிக்கிழமை அன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு வேதவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர்.

ariyalur

இம்முகாமில் 18 முதல் 35 வயது வரையிலான ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.  மேலும், விவரங்களுக்கு 04329 - 228641 என்ற தொலைபேசி எண் (அல்லது) ariyalurjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் ரமண சரஸ்வதி கேட்டுக்கொண்டுள்ளார்.