புதுக்கோட்டையில் நவ.11-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் கவிதா ராமு தகவல்!

 
collector kavidha

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளதாக, ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

jobs

இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, டிப்ளமோ போன்ற கல்வித்தகுதி உடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுய விபர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று  நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

மேலும், வேலைநாடும் இளைஞர்கள் தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.