அரியலூர், செந்துறை பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு!

 
power cut

அரியலூர், தேளுர் மற்றும் செந்துறை துணைமின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படுவதாக ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இதன்படி, 100/33-KV அரியலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கயர்லாபாத், இராஜிவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கொளப்பாடி, மங்களம் மற்றும் குறுமஞ்சாவடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ariyalur

இதேபோல், 33/11KV - தேளுர் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வி.கைக்காட்டி, தேளுர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி,ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம் மற்றும் மைல்லாண்டகோட்டை ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், 33/11KV - செந்துறை துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான இராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் முழுவதும் காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.