சிவகாசி அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை!

 
dead

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்கன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது 17 வயது மகள் மாலதி. இவர் சிவகாசியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக மாடசாமியின் மனைவி அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் மாலதி, தந்தை மாடசாமியுடன் வசித்து வந்தார். இதனிடையே மாலதிக்கு வயிற்று வலியால் அவதி பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், உடல் நிலை சரியில்லை என கூறி அவர் வீட்டில் இருந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

sivakasi

இது குறித்து அந்த பகுதி மக்கள், சிவகாசி டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் மாலதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தந்தை மாடசாமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.