சேலம் அருகே பிளஸ் 2 மாணவி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை!

 
dead

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 12ஆம் வகுப்பு மாணவி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி பொம்மி. இவர்களது மகள் சிவசாரதி(16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சிவசாரதிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி தீரவில்லை. இதனால் மனவேதனை அடைந்த சிவசாரதி கடந்த 15ஆம் தேதி வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். 

salem

இதனை அடுத்து, குடும்பத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று சிவசாரதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிவசாரதி தந்தை சின்னையன் அளித்த புகாரின் பேரில் கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.