ஆடி 3-வது வெள்ளியையொட்டி, ஈரோட்டில் அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!

 
Aadi friday

ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். 

pannari

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. தொடர்ந்து, மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. கருங்கல்பாளையம் சோளீஸ்வரர்கோவில் வில்வேஸ்வரர் - புஷ்பநாயகி அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதேபோல், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கொங்காலம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஆடி 3-ஆம் வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

amman

இதேபோல், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி நேற்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார். இதனை பெண்கள் நீண்ட வரிசையில் காந்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். இதேபோல் தண்டு மாரியம்மன் கோவிலிலும் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோவில், பவானியில் கருமாரியம்மன் கோவில், புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

amman

கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர். இதேபோல், சாரதா மாரியம்மன் கோவில், அந்தியூரில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் என ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.