பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்!

 
train

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக ஜனவரி 13 முதல் ஜனவரி 18 வரை திண்டுக்கல் - கோயம்புத்தூர் இடையே ஒரு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் - திண்டுக்கல் முன்பதிவு இல்லாத சிறப்பு விரைவு ரயில் (06077) கோயம்புத்தூரில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.00 மணிக்கு திண்டுக்கல் வந்து சேரும். மறுமார்க்கத்தில் திண்டுக்கல் - கோயம்புத்தூர் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (06078) திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும்.

dindigul

இந்த ரயில்கள் அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரயில் மேலாளர் அறையுடன் கூடிய பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.