குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய்... சிகிச்சை பலனின்றி குழந்தைகள் பலி!

 
dead

கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு எலி மருந்தை கொடுத்துவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், குழந்தைகள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கெட்டூரை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி கௌரி(26). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஜீவன்(4) என்ற மகனும், பாவனா (2) என்ற மகளும் உள்ளனர்.  இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் கௌரி கணவரிடம் கோபித்துக் கொண்டு, பிள்ளைகளுடன் கந்திக்குப்பம் அடுத்த செந்தாரப்பள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கௌரி, சம்பவத்தன்று குழந்தைகளுக்கு எலி மருந்தை கொடுத்துவிட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

dharmapuri gh

இதனை கண்ட உறவினர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைகள் ஜீவன், பாவனா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி  நேற்று இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் குறித்து கந்திக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.