சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி... ஈரோடு புறநகர் பகுதிகளில் இன்று மின் தடை!

 
power cut

ஈரோடு சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதை ஒட்டி, புறநகர் பகுதிகளில் இன்று மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக ஈரோடு நகரியம் மின் விநியோக செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,  ஈரோடு அடுத்த சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதனால், சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர் பந்தல் பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமி நகர், காலிங்கராயன் பாளையம், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம் பரப்பு, கங்காபுரம், செல்லப்பம் பாளையம், பேரோடு, மாமரத்துப்பாளையம், மேட்டுப்பாளையம், நொச்சிப்பாளையம், தயிர்ப்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

generic erode

இதேபோல், சேமூர், சூளை, சொட்டையம்பாளையம், கே.ஆர்.பாளையம், ராசாம்பாளையம், தொட்டம் பட்டி, பி.பெ.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எஸ்.நகர், கே.ஆர்.குளம், காவிரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம்பாளையம், ஈ.பி.பி.நகர், எஸ்.எஸ்.டி.நகர், வேலவன் நகர், ஊத்துக்காடு, வாவிக்கடை, பெருந்துறை சந்தை, அணைக்கட்டு, பழையூர், பெரியார் நகர், எலவமலை ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.