திருவாரூரில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்!

 
thiruvarur collector

திருவாரூர் மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட  மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 10 ஒன்றியங்களில் வரும் 25ம் தேதி முதல் மே 5 வரை நடைபெற உள்ளதாக ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வேண்டுவோர், உதவி உபகரணங்களான 3 சக்கர வண்டி, சக்கர நாற்காலி, காதொலி கருவி, நடைபயிற்று வண்டி, கை, கால் செயற்கை அவயங்களுக்கான காலிப்பர்கள், கல்வி உதவித்தொகை மற்றும் இலவச அறுவை சிகிச்சை  தேவைப்படுவோர்களுக்கு திருவாருர் ஒன்றியத்துக்கு வரும் 25ஆம் தேதி அன்று காலை 9.30  மணி முதல் மதியம் 2 மணி வரை திருவாரூர் ஆர்.சி.பாத்திமா உயர்நிலைப் பள்ளியிலும், கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு வரும் 26ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.

வலங்கைமான் ஒன்றியத்துக்கு வரும் 27ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை, வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வரும் 28ஆம் தேதி மன்னார்குடி ஒன்றியத்துக்கு 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை கோபால சமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், வரும் 29ஆம் தேதி திருத்துறைப்புண்டி ஒன்றியத்துக்கு  காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை திருத்துறைப்புண்டி ஊராட்சி ஒன்றிய நடுப்பள்ளியிலும் நடைபெறுகிறது.

handicapped students

வரும் 30ஆம் தேதி நன்னிலம் ஒன்றியத்திற்கு காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மே 2 ஆம் தேதி நீடாமங்கலம் ஒன்றியத்துக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், மே 4ஆம் தேதி குடவாசல் ஒன்றியத்திற்கு காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மே 5ஆம் தேதி கோட்டுர் ஒன்றியத்திற்கு காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை  குமாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், மே 6ஆம் தேதி முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.

மாற்றுத்திறன் அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் பெற தேவைப்படும்  ஆவணங்கள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4,  வருமான வரிச்சான்றிதழ், குடும்ப அட்டை நகல், தலைமை ஆசிரியர் சான்று (படிக்கும் மாணவர்களுக்கு), மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை புத்தக நகல் ஆகியவைகளாகும் குறிப்பிட்ட இடங்களில் நடைபெறும் மருத்துவ மதிப்பீட்டு  முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.