வாழப்பாடி அரசு பள்ளியில் கணித ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு!

 
valapadi

வாழப்பாடி அரசு பள்ளியில் கணித ஆசிரியர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கருமாபுரம் தென்சோலை பகுதியை சேர்ந்தவர் சரவணன்(42). இவர் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை சரவணன் வழக்கம்போல்  பள்ளிக்கு பணிக்கு சென்றிருந்தார். அங்கு கழிவறைக்கு சென்றபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

valapadi

இதனை கண்ட சக ஆசிரியர்கள், அவரை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆசிரியர் சரவணன் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு சக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கதறி அழுதனர். பள்ளி வளாகத்தில் ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.