மருதுபாண்டியர்கள் நினைவு தினம் - விருதுநகர் மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்!

 
Tasmac

விருதுநகர் மாவட்டத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவு தினமான இன்று ஒருநாள் மட்டும் டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் தற்காலிமாக மூடப்படுவதாக, ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் F.L-1,F.L-2, F.L-3,F.L-3A, F.L-3AA மற்றும் F.L-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003ஆம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி(1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவு தினமான இன்று ஓரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

virudhunagar

மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்டாக் நிறுவன பணியாளர்கள் ( F.L-1),F.L-2, F.L-3,F.L-3A, F.L-3AA மற்றும் F.L-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.