ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் பணம் இழப்பு... விரக்தியில் உயிரை மாய்த்த இளைஞர்!

 
harur

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஆன்லைன் ரம்மி மற்றும் கேரள லாட்டரியில் ரூ.15 லட்சம் வரை பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள முத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவர் தனியார் கிரானைட் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். பிரபு ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி உளளார்.  அதில் ரூ.15 லட்சத்திற்கு மேலாக பணத்தை இழந்துள்ளார். அதேபோல், கேரள லாட்டரியிலும் ரூ.3 லட்சத்தை இழந்துள்ளார்.  இதனால் கடன் தொல்லை அதிகரித்துள்ளது. கடனை அடைப்பதற்காக பிரபு தான் குடியிருந்த வீட்டை விற்றுள்ளார். மேலும், அதில் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த பிரபு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

suicide

தகவலின் பேரில் அரூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் லாட்டரியில் பணத்தை இழந்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.