சீர்காழி அருகே காரில் கடத்திய ரூ.1.25 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் - ஒருவர் கைது!

 
sirkazhi

சீர்காழி அருகே காரில் கடத்திய ரூ.1.25 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனைக்காக காரில் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பி நிஷாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், எஸ்.பி தனி பிரிவு போலீசார் சீர்காழி அடுத்துள்ள தைக்கால் கிராமத்தில் உள்ள முகமது யாசின்(44) என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோதனையிட்டனர். அப்போது, அவரது வீட்டின் அருகில் நின்ற காரில் இருந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா புகையிலை பொருட்களை கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. 

sirkazhi

இதனை அடுத்து, காரில் 14 மூட்டைகளில் இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்பிலான குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவற்றை விற்பனைக்காக கடத்த முயன்ற முகமது யாசினையும் கைது செய்தனர். தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் முகமது யாசின், ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.