தூத்துக்குடியில் சாலை விபத்தில் மணமகன் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

 
tuti

தூத்துக்குடியில் சில மணி நேரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி பொட்டல்காடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ஜெகதீஷ் (27). உப்பள தொழிலாளியான இவருக்கு, பழையகாயல் புல்லாவழியை சேர்ந்த பெண்ணுடனம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்காக தயாராகி கொண்டிருந்த ஜெகதீஷ், இன்று காலை 6 மணி அளவில் திடீரென தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். தூத்துக்குடி  துறைமுகம் - மதுரை புறவழிச்சாலையில் உப்பாற்று பாலம் ஓடை பகுதியில் சென்றபோது ஜெகதீஷ் வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

tuti gh

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவத்துக்கு வந்த போலீசார், ஜெகதீஷின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சில மணி நேரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.