100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான புகார்களை குறைதீர்ப்பாளரிடம் தெரிவிக்கலாம் - புதுக்கோட்டை ஆட்சியர்!

 
collector kavidha

புதுக்கோட்டை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான புகார்களை, குறைதீர்ப்பாளரிடம் தெரிவிக்கலாம் என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் (Ombudsperson)உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைகளை தீர்ப்பதற்காக ரகோத்தமன் என்பவர்  புதுக்கோட்டை மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அவருடைய கைப்பேசி எண் 8925811320 மற்றும் மின்னஞ்சல் முகவரி ombudspkt@gmail.com ஆகும். 

100 நாள் வேலைகள் முறையாக நடப்பதில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து..

பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.