ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு... வஞ்சிரம் கிலோ ரூ.900-க்கு விற்பனை!

 
fish

மீன்பிடி தடைக்காலம் காரணமாக வரத்து குறைந்ததால் ஈரோடு மார்க்கெட்டில் மீன்களின் விலை ரூ.50 முதல் ரூ. 150 வரை உயர்ந்து விற்பனையானது.

 ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட கடைகளில் கடல் மீன்கள் நேரடியாக கொண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு வார இறுதி நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் வருகை தந்து தங்களுக்கு பிடித்தமான மீன் வகைகளை வாங்கிச் செல்வர். இந்த மார்க்கெட்டிற்கு நாள்தோறும் 15 டன் மீன்கள் வரத்தாகி வந்தது.

fish1

இந்த நிலையில், தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், ஈரோடு ஸ்டோனி பாலம் மார்க்கெட்டிற்கு கேரளாவில் இருந்து மீன்கள் வரத்து ஆகி வருகிறது. அடுத்துடன், மீன் வரத்து பகுதியாக குறைந்துள்ளதால், அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மீன் மார்க்கெட்டிற்கு கேரளாவில் இருந்து 7 டன் மீன்கள் மட்டுமே வரத்தாகியது. இதனால் மீன்களின் விலை ரூ.50 முதல் ரூ. 150 வரை உயர்ந்தது. 

குறிப்பாக கடந்த மாதம் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.750 வரை விற்பனையான நிலையில், இன்று வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ரூ.900-க்கு விற்பனையானது. அத்துடன், மற்ற மீன்கள் விலையும் உயர்ந்து. மீன்களின் விலை கிலோவில் வருமாறு :- கொடுவா -ரூ. 450, அயிலை- ரூ.250, பாறை - ரூ. 450, சங்கரா - ரூ. 350, விளா - ரூ. 450, இறால் - ரூ. 500, மத்தி - ரூ. 200, நண்டு - ரூ. 400, திருகை- ரூ. 300, சீலா - ரூ. 400, முரல் - ரூ. 350. இதேபோல், ஈரோட்டில் இன்று இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.